மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து கோவையில் மருத்துவர்கள் உண்ணாவிரதம்


அரசு மருத்துவ மேற்படிப்பிற்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



அரசு மருத்துமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுவந்தது. கடந்த 25 வருடங்களாக இருந்து வந்த இந்த ஒதுக்கீட்டை தற்போது நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவை அரசு மருத்துவமனை மருத்துகள் 13-வது நாளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதப்டி, இன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது, மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் கிராமங்களுக்கு மருத்துவர்கள் செல்லாத நிலை ஏற்படும். உடனடியாக தமிழக அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு அவரச சட்டம் இயற்ற வேண்டும் என  மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...