அமெரிக்காவில் ரூ.4000 கோடி முதலீடு ஈர்த்த முதல்வர் - அமைச்சர் முத்துசாமி பெருமிதம்

கோவையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.96.47 கோடி கடன் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் முத்துசாமி பேசினார். முதல்வரின் அமெரிக்கப் பயணம் குறித்தும், மகளிர் குழுக்களின் முக்கியத்துவம் பற்றியும் அவர் விளக்கினார்.



கோவை: கோவையில் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.



இந்நிகழ்வில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கோவை மாவட்டத்தில் உள்ள 1,727 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுமார் ரூ.96.47 கோடி கடன்களை வழங்கினார்.



நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முத்துசாமி, "கோவை மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு ரூ.96.47 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஒருங்கிணைத்து பணியாற்றிய ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், "மகளிர் சுயஉதவிக் குழு கலைஞர் கொண்டு வந்த மகத்தான திட்டம். தற்போதைய முதல்வர் மகளிருக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சுயஉதவிக் குழுக்களை பொருத்தவரை முதல்வர் தனி கவனம் செலுத்துகிறார்," என்று குறிப்பிட்டார்.

முதல்வரின் அமெரிக்கப் பயணம் குறித்தும் அமைச்சர் பேசினார். "அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் இதுவரை 11 நிறுவனங்களுடன் தமிழகத்தில் முதலீடு செய்ய ரூ.4,000 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடியான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

மேலும், "வெளிமாநிலங்களில் இருந்து பார்ப்போருக்கு நமது திட்டங்கள் பெரிய திட்டங்களாக தெரிகிறது," என்று அமைச்சர் முத்துசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...