ஆனைமலை தென்னை நாற்றுப்பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனை - தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

ஆனைமலை அருகே ஆழியாற்றில் உள்ள தோட்டக்கலைத் துறையின் தென்னை நாற்றுப்பண்ணையில் நெட்டை மற்றும் குட்டை ரக கலப்பின தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Coimbatore: ஆனைமலை அருகே உள்ள தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் தென்னை நாற்றுப் பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, ஆனைமலை அருகே ஆழியாற்றில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் கீழ் இயங்கும் தென்னை நாற்றுப்பண்ணையில் வளர்க்கப்படும் நெட்டை, குட்டை ரக கலப்பின நாற்றுகள் தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.

விற்பனை விலை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ள அவர், நெட்டை ரக கன்றுகள் ஒன்று ரூ.65க்கும், கலப்பின ரக கன்றுகள் ஒன்று ரூ.125க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். தென்னங்கன்றுகள் வாங்க விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு ஆனைமலை தோட்டக்கலை துறை அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம் என உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...