பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தி: இந்து முன்னணி சார்பில் முளைப்பாரி ஊர்வலம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டி கே டி மில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டி கே டி மில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, விநாயகர் சிலை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாகத் திரண்டு கும்மியடித்து மகிழ்ந்தனர்.

இந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் டி கே டி ராஜா தலைமையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.



இந்த ஊர்வலம் டி கே டி மில் பகுதியில் தொடங்கி, முருகன் மில் பகுதி வழியாக சென்று, விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு முளைப்பாரி ஊர்வலத்தை சிறப்பித்தனர். இந்து முன்னணியினர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியிருந்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...