உடுமலையில் 100 ஆண்டு பழமையான பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

உடுமலையில் உள்ள 100 ஆண்டு பழமையான பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ்பெற்ற 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு பிரசன்ன விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.

காலையில் ஹோம பூஜையும், பால், தயிர் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

இதேபோல, உடுமலையின் பிற பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள வினைத்தீர்க்கும் விநாயகர் கோவிலில் தங்க காப்பு அலங்காரமும், உடுமலை குட்டை திடல் பகுதியில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சந்தன காப்பு மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. இங்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...