கல்லூரி அருகே உள்ள பேக்கரியில் போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

பள்ளி மற்றும் கல்லூரி அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் கல்லூரியின் அருகே போதை பொருட்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கோவை வஞ்சிமா நகர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. கல்லூரியின் அருகே புகையிலை, பாக்கு மற்றும் சிகரட்டுகள் விற்பனை நடைபெறுவதாக பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இந்த தகவலை அடுத்து நேற்று மாலை வஞ்சிமாநகர் பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு இருந்த பேக்கரி ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்களான பான்மசாலா, குட்கா மற்றும் சிகரட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து, பேக்கரி நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த போதை பொருட்களை போலீசார் பரிமுதல் செய்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...