கோவை சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் முகாம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் வழங்கும் முகாம் தினசரி நடைபெறும் என்று ஆணையர் M சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார். வியாபாரிகள் தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் இன்று (செப்டம்பர் 4) வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இந்த முகாம் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் பின்வரும் வியாபாரிகள் கலந்து கொண்டு பயனடையலாம்:

1. ஏற்கனவே சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடனுக்கு விண்ணப்பித்து கடன் கிடைக்காத வியாபாரிகள்

2. முதல் மற்றும் இரண்டாம் தவணை கடன் பெற்று முறையாக திரும்ப செலுத்திய வியாபாரிகள்

கலந்து கொள்ளும் வியாபாரிகள் பின்வரும் ஆவணங்களை கொண்டு வர வேண்டும்:

1. சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை

2. ஆதார் அட்டை

3. வங்கி கணக்கு புத்தகம்

இந்த முகாமில் கலந்து கொண்டு அனைத்து சாலையோர வியாபாரிகளும் பயனடைய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...