திருப்பூரில் சர்வோதய சங்க ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பூரில் தமிழ்நாடு சர்வோதய சங்க ஊழியர்கள் பொருட்கள் உற்பத்தி முடக்கம் மற்றும் விற்பனை வீழ்ச்சியை எதிர்த்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை இழப்பு அச்சுறுத்தலும் உள்ளது.



Coimbatore: திருப்பூரில் தமிழ்நாடு சர்வோதய சங்க ஊழியர்கள் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருட்கள் உற்பத்தி முடக்கம் மற்றும் விற்பனை வீழ்ச்சியை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சர்வோதய சங்கம் மூலமாக ஏராளமான கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு காதி கிராப்ட் மையங்கள் வழியாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. மூங்கில் பொருட்கள், ஊதுபத்தி, சோப், மெத்தைகள், கைவினை பொருட்கள் என பல்வேறு பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த பொருட்களின் தரம் காரணமாக பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வந்தது.



ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பூர் தலைமை அலுவலகத்தில் பொருட்கள் முறையாக உற்பத்தி செய்யப்படவில்லை என்றும், வெளியில் இருந்து கொள்முதல் செய்யும் பொருட்களை கொள்முதல் செய்து தராமல் மெத்தனம் காட்டி வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதன் காரணமாக விற்பனை பெருமளவு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உடனடியாக உற்பத்தியை அதிகரித்து சர்வோதய சங்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சர்வோதய சங்க விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...