பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் நோயாளிகள் பிரிவை ஆய்வு செய்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்

கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் நோயாளிகள் பிரிவை ஆய்வு செய்தார். மழைக்கால முன்னேற்பாடுகள் மற்றும் சிகிச்சை வசதிகளை ஆராய்ந்தார்.


கோவை: கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன் இன்று பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் வெளிநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் பிரிவை ஆய்வு மேற்கொண்டார்.



தற்போதைய மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.



பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு, பெண்கள் மற்றும் ஆண்கள் மருத்துவ பிரிவில் காய்ச்சல் நோயாளிகளுக்கு 50 உள்நோயாளிகள் இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



வெளி நோயாளிகள் பிரிவில் தினமும் 50 முதல் 100 காய்ச்சல் நோயாளிகள் வருகை தருவதாகவும், உள்நோயாளிகளாக தினமும் 10 முதல் 20 நோயாளிகள் அனுமதிக்கப்படுவதாகவும் தெரியவந்தது. இந்த நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, காய்ச்சலின் வகை கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.



காய்ச்சல் நோயாளிகளுக்கு சுடுநீர், அரிசி கஞ்சி, நிலவேம்பு கசாயம் ஆகியவை வழங்கப்படுகிறது. அதிக நீர் இழப்பு உள்ள நோயாளிகளுக்கு உள்நோயாளியாக அனுமதித்து குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. மேலும், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் போதுமான அளவில் உள்ளதா என்பதையும் டாக்டர் ராஜசேகரன் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் மூலம், மழைக்கால நோய்களுக்கு எதிரான தயார்நிலை மற்றும் சிகிச்சை வசதிகள் குறித்த விரிவான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...