கோவையில் சிறப்பு குழந்தைகள் குறித்த கலந்துரையாடல்: பெற்றோர்களுக்கு RAAC அமைப்பு ஏற்பாடு

கோவையில் RAAC அமைப்பு சார்பில் சிறப்பு குழந்தைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. குழந்தைகள் நல ஆலோசகர் மோகனவாணி பங்கேற்று பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார். சிறப்பு குழந்தைகளுக்கான "நம்ம ஸ்பெஷல் பார்க்" குறித்த தகவலும் பகிரப்பட்டது.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள RAAC அலுவலகத்தில் இன்று (செப். 04) சிறப்பு குழந்தைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள் நல ஆலோசகர் மோகனவாணி கலந்துகொண்டு சிறப்பு குழந்தைகள் குறித்து பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்.



இந்த கலந்துரையாடலில் சிறப்பு குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது, அவர்களது மனநிலையை எப்படி சமநிலையில் வைத்துக் கொள்வது போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது மனநிலையை சீராக வைத்துக் கொள்வது மற்றும் தயக்கமின்றி உற்சாகத்தோடு சமூகத்தில் அங்கம் வகிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.



RAAC அமைப்பு சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கான "நம்ம ஸ்பெஷல் பார்க்" என்ற பூங்கா கோவை காளப்பட்டி சாலையில் உள்ள நேத்ரா நகரில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பூங்கா BOSCH நிறுவனத்தின் CSR நிதி மற்றும் கோவை மாநகராட்சியின் ஒத்துழைப்புடன் அமைக்கப்படுகிறது. சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுத் தளங்கள், ஜிப் லைன், ஏரோபிளேன் மாதிரி, பட்டாம்பூச்சி மற்றும் மூலிகை தோட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.



அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், இந்த பூங்காவிற்கு செல்ல கட்டணம் ஏதும் இல்லை என்றும் RAAC அமைப்பு தெரிவித்துள்ளது. கலந்துரையாடலின் போது இந்தப் பூங்கா குறித்தும் பெற்றோர்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்றது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், புதிய உற்சாகம் பெற்றதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். இத்தகைய கலந்துரையாடல்கள் இனி வாரந்தோறும் புதன்கிழமை காலை 11.30 மணி முதல் நண்பகல் 01:00 மணி வரை நடைபெறும் என்றும், இந்த கலந்துரையாடலில் பங்கு பெற கட்டணம் ஏதுமில்லை என்றும் RAAC அமைப்பு அறிவித்துள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...