கோவை மாநகராட்சி ஆணையாளர் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் மத்திய மண்டலத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால், சமுதாய நலக்கூடம், சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.





இந்த ஆய்வின்போது, வார்டு எண் 47க்குட்பட்ட சங்கனூர் பிரதான சாலை பகுதி, நால்வர் லே-அவுட் பகுதி மற்றும் இரத்தினபுரி, பி.எம்.சாமி காலனி ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் சீரமைப்பு பணிகளை ஆணையாளர் பார்வையிட்டார்.



மேலும், காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தினை ஆய்வு செய்து, அதனை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 47க்குட்பட்ட செல்வகுமாரசாமி கார்டன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் சிறுவர் விளையாட்டு பூங்காவை பார்வையிட்ட ஆணையாளர், பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, இரத்தினபுரி, அமரர் ஜீவா சாலையின் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான சிறுவர் விளையாட்டு பூங்காவையும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையர் செந்தில்குமரன், மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...