கடந்த 2017 ஏப்ரல் 2ம் தேதியன்று நடைபெற்ற முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாமில் 3.29 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது, வரும் ஏப்ரல் 30-ம் தேதியன்று (ஞாயிறு) இரண்டாம் தவணை சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.
கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1182 மையங்களும், நகர்புறங்களில் 399 மையங்களும் என 1581 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஐந்து வயதிற்கு உட்பட்ட 3.3 லட்சம் குழந்தைகள் பயன்பெறவுள்ளனர்.
வெளி மாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வசிப்பவர்களின் 1629 ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க 34 மையங்கள் மற்றும் 24 நடமாடும் மையங்கள் சிறப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
இம்முகாமிற்கு தேவையான போலியோ சொட்டு மருந்துகள் அனைத்து மையங்களுக்கும் அனுப்பப்பட்டு முகாமில் வழங்க தயார் நிலையில் உள்ளது.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத் துறை அங்கன்வாடி பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 6536 பணியாளர்கள் பணியாற்றவுள்ளனர். இப்பணிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே பாலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் முகாம் நாளான ஏப்ரல் 30ம் தேதியன்று தவறாமல் போலியோ சொட்ட மருந்து அளிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.