விசைத்தறி தொழிலை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது- மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி


விசைத்தறி தொழிலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என கோவையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

விசைத்தறி மற்றும் ஜவுளிதுறையினை மேம்படுத்துவது தொடர்பாக பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்ருமிதி இராணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய ஜவுளித்துறை செயலர் கவிதா குப்தா, ஜவுளித்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தினைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறுகையில், மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் அடுத்த பட்ஜெட் கூட்டத்திற்கு முன்பு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் அறிவுரைக்கேற்ப விசைத்தறி மேம்பாட்டிற்காக கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "பவர் டெக்ஸ் இந்தியா" திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோலார் மின் திட்டம் மூலம் பொதுப்பிரிவினருக்கு 50 சதவிகிதம் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 75 முதல் 90 சதவிகிதம் வரையும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 

விசைத்தறியாளர்கள், மத்திய அரசின் மானியம் மற்றும் நலத்திட்டங்கள் உள்ளிட்ட தொழில் சார்ந்த உதவிகளை பெற பிரத்யேகமாக 1800 222 017 என்ற அலைப்பேசி தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலுக்கு கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 162 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய ஜவுளித்துறைச் செயலர் கவிதா குப்தா பேட்டியளிக்கையில், 

சர்வதேச சந்தையில் இந்திய ஜவுளித்துறையினரின் பலத்தை நிரூபிக்கும் வகையில் வருகிற ஜூன் 13-ம் தேதியிலிருந்து ஜூலை 2-ம் தேதி வரை குஜராத்தில் மிகப்பெரிய ஜவுளிக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. அதில் தனியாக அரங்கு அமைக்க திருப்பூர் தொழில்துறையினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பவர் டேக்ஸ் இந்தியா திட்டத்தின் கீழ் வரும் பருத்தி வங்கி திட்டத்தின் மூலம் 11 நபர்கள் குழுவாக இணைந்து பருத்தியை கொள்முதல் செய்வதற்கு சுமார் 2 கோடி ரூபாய் மத்திய அரசால் கடன் வழங்கப்படுகிறது. பருத்தி விலையால் பாதிக்கப்படும் விசைத்தறியாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். 

மேலும் கடந்தாண்டு ஜவுளித்துறையின் ஏற்றுமதி 40 பில்லியன் டாலர்ஸ். அதில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளது" என தெரிவித்தார்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...