கோவை கொடிசியாவில் 2 நாள் டென்டல் லேப் எக்ஸ்போ மற்றும் கருத்தரங்கம்


ஐவரி கண்காட்சி மற்றும் கைடன்ட் நிறுவனம் சார்பில் இந்தியாவில் முதல் முறையாக டென்டல் லேப் எக்ஸ்போ மற்றும் கருத்தரங்கம் கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் வரும் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

முதல் முறையாக பல் சிகிச்சை துறையில் உலகமெங்கும் உள்ள மருத்துவர்களும், வல்லுநர்களும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று தங்களின் அனுபவங்களையும், அறிவையும் பகிந்துகொள்ள உள்ளனர். இத்தகைய கருத்தங்கம் மற்றும் கண்காட்சி பல் மருத்துவர்கள் மற்றும் அந்தத் துறை சார்ந்துள்ள தொழில்நுட்ப வல்லநர் தங்களின் அறிவை விஸ்தரித்துக் கொள்ள உதவியாக இருக்கும். மேலும், பல் சிகிச்சை சார்ந்த துறை மேம்பாட்டுக்கும் இந்தக் கருத்தரங்கம் உறுதுணையாகும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்தக் கருத்தரங்கில் பல் சிகிச்சை துறை சார்ந்த 60-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் உரையாற்ற உள்ளனர். மேலும், கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த அரங்குகளில் பல் சிகிச்சையில் புதிதாக வந்துள்ள நவீன தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளும், சிகிச்சை முறைகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இந்தக் கண்காட்சி ஒருங்கிணைப்புக் குழுவில் நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இடம்பெறவுள்ளனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா டென்டல் கல்லூரி துணை முதல்வர் வி.ஆர்.திருமூர்த்தியும், மும்பையில் பிரபல பல் மருத்துவராக உள்ள சந்தோஷ் மயக்கர் ஆகியோர் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிக்கு தலைமை வகிக்க உள்ளனர்.

டேன்டல் கல்லுரி மதுரா டீனும், கைடன்ட் இதழ் ஆசிரியருமான மருத்துவர் மனீஷ் ரஹோரி கண்காட்சி ஒருங்கிணைப்பு செயலாளராக உள்ளார். ஹைதராபாத் பிரபல மருத்துவராக உள்ள மகேந்திரநாத் ரெட்டி கண்காட்சி அறிவியல் கமிட்டி தலைவராக உள்ளார். பெங்களூர் கான்பிடென்ட் ஆய்வகத்தின் இயக்குநர் கமிட்டியின் துணைத் தலைவராக உள்ளார். கருத்தரங்கின் புரவலர்களாக முன்னாள் ராணுவ வீரர் அன்வரீன் கானி, ஆர்விஎஸ் டென்டல் கல்லூரி முன்னாள் முதல்வர் மருத்துவர் பி.ராஜ்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி அறங்காவலர் ஆர்.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு மாநில பல் சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம், கர்நாடக மாநில பல் சிகிச்சை ஆய்வகங்களின் சங்கம், மகாராஷ்டிரா டென்டல் மெக்கானிக்ஸ் சங்கம், குஜராத் பல் சிகிச்சை ஆய்வகங்களின் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைக்கவுள்ளார். இந்திய டென்டல் கவுன்சில் செயற்குழு உறுப்பினராக உள்ள மருத்துவர் சுரேஷ் குமார் கதரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...