நீலகிரி எம்பி ஆ.ராசா நெல்லித்துறை உண்டு உறைவிடப் பள்ளியின் புதிய விடுதியை ஆய்வு செய்தார்

நீலகிரி எம்பி ஆ.ராசா நெல்லித்துறையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியின் புதிய விடுதியை ஆய்வு செய்தார். மாணார் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சீருடை வழங்குவதாக உறுதியளித்தார்.


கோவை: நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, காரமடை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்லித்துறை பஞ்சாயத்தில் அமைந்துள்ள மலைக்கிராமமான மாணார் பகுதியில் இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளியின் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதியை செப்டம்பர் 2 ஆம் தேதி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, எம்பி ஆ.ராசா பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சீருடை வழங்குவதாக உறுதியளித்தார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் ப.அருண்குமார், கூடலூர் நகரச் செயலாளர் அ.அரிவரசு, கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைத் தலைவர் ஜெ.அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...