நீலகிரி எம்பி ஆ.ராசா நெல்லித்துறை உண்டு உறைவிடப் பள்ளியின் புதிய விடுதியை ஆய்வு செய்தார்

நீலகிரி எம்பி ஆ.ராசா நெல்லித்துறையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியின் புதிய விடுதியை ஆய்வு செய்தார். மாணார் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சீருடை வழங்குவதாக உறுதியளித்தார்.


கோவை: நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, காரமடை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்லித்துறை பஞ்சாயத்தில் அமைந்துள்ள மலைக்கிராமமான மாணார் பகுதியில் இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளியின் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதியை செப்டம்பர் 2 ஆம் தேதி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, எம்பி ஆ.ராசா பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சீருடை வழங்குவதாக உறுதியளித்தார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் ப.அருண்குமார், கூடலூர் நகரச் செயலாளர் அ.அரிவரசு, கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைத் தலைவர் ஜெ.அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...