கோவை வெள்ளலூர் அருகே பெட்டிக்கடையில் 30 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது

கோவை வெள்ளலூர் அருகே பெட்டிக்கடையில் போலீஸார் திடீர் சோதனை நடத்தியதில் 30 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் அருகே உள்ள பெட்டிக்கடையில் 30 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதுடன், இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை போத்தனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று (ஆகஸ்ட் 30) வெள்ளலூர் புற்றுக்கண் பாலம் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார். இந்த சோதனையின் போது, கடையில் 30 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (குட்கா) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புகையிலை பொருட்கள் அனைத்தும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தவர்கள் வெள்ளலூரைச் சேர்ந்த ரமேஷ் (வயது 50) மற்றும் குனியமுத்தூர் செல்வம் நகரைச் சேர்ந்த அசாருதீன் (வயது 30) என தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் ஒரு மொபட் மற்றும் ஒரு கார் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...