பல்லடம் பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம்கள்: எம்பி கணபதி ராஜ்குமார் பங்கேற்பு

கோவை பாராளுமன்ற தொகுதியின் பல்லடம் பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. எம்பி கணபதி ராஜ்குமார் மற்றும் எம்எல்ஏ செல்வராஜ் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.


திருப்பூர்: கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் அறிவொளிநகர், நாதகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றன.



இந்த முகாம்களில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



சுகாதார அலுவலர்கள், ஊராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள், திமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த முகாம்களில் பங்கேற்றனர்.



முகாமில் உரையாற்றிய எம்பி கணபதி ராஜ்குமார், "இந்திய அளவில் பேசப்படும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இங்கு அமல்படுத்தப்படும் திட்டங்களை மற்ற மாநில முதலமைச்சர்கள் கேட்டறிந்து அந்தந்த மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் முப்பதாயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யப்படுகிறது. அதனால் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இதுதான் திராவிட மாடல் அரசு," என்று தெரிவித்தார்.



இந்த மருத்துவ முகாம்களில் பொது மருத்துவம், இருதய நோய் சிகிச்சை, சர்க்கரை நோய் சிகிச்சை, மகப்பேறு மருத்துவம் ஆகியவற்றிற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் இசிஜி பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.



நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர்.

Newsletter

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...