பொள்ளாச்சி நகராட்சியின் அவசர கூட்டத்தில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய ஆணையாளர் கணேசன் வரவேற்கப்பட்டார். கொசு ஒழிப்பு, கழிவுநீர் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் இன்று நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கணேசன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 70 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.



கூட்டத்தின் தொடக்கத்தில், புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையாளர் கணேசனுக்கு நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் சால்வை அணிவித்து மலர்க்கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களைத் தவிர திமுக, மதிமுக உள்ளிட்ட 33 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.



கூட்டம் தொடங்குவதற்கு முன், மறைந்த திமுக கவுன்சிலர் பழனிச்சாமி மற்றும் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.



கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினர். கொசு தொல்லை அதிகரித்து வருவதால் கொசு மருந்து அடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர். மேலும், நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கைகளுக்கு பதிலளித்த நகராட்சி ஆணையாளர் கணேசன், நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், காலியாக உள்ள பணியிடங்களுக்கு அலுவலர்களை நியமிக்குமாறு அரசுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார். அனைத்து துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டபின் எந்த குறைகளும் இல்லாமல் பணிகள் நடக்கும் என்றும் உறுதியளித்தார்.

நகராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு விடும் பணிக்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் கணேசன் தெரிவித்தார். இந்த அவசர கூட்டம் நகராட்சியின் பல்வேறு பிரச்சினைகளை விவாதித்து தீர்வுகாண உதவியதாக உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...