பொள்ளாச்சி அருகே குடும்பப் பிரச்சினையால் இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

பொள்ளாச்சி அருகே ஆனைமலை தாத்தூரில், குடும்பப் பிரச்சினையால் 30 வயது தாய் தனது 7 மற்றும் 4 வயது குழந்தைகளை கிணற்றில் வீசி, பின்னர் தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டார். போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தாத்தூர் பகுதியில் குடும்பப் பிரச்சினை காரணமாக தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் நடந்துள்ளது.

ஆனைமலை தாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்.



இவரது மனைவி சுகன்யா (30). இவர்களுக்கு தனுஸ்ரீ (7) மற்றும் அகிலன் (4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அருண்குமார் மற்றும் சுகன்யா இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக சுகன்யா தனது இரண்டு குழந்தைகளையும் அருகே உள்ள கிணற்றில் வீசி, பின்னர் தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் ஆனைமலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் இரண்டு குழந்தைகள் மற்றும் சுகன்யா ஆகிய மூவரின் உடல்களும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன. பிரேத பரிசோதனைக்காக உடல்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து ஆனைமலை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பப் பிரச்சினை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், உறவினர்களிடையேயும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை செம்மொழிப் பூங்காவில் மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல செம்மொழிப் பூங்காவில் மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ரோஜாத் தோட்டம்,...

Driving Licences, RCs to Go Digital: Coimbatore Contract Workers Seek Alternative Jobs in Transport Dept

Following Tamil Nadu’s announcement that driving licences and vehicle Registration Certificates (RCs) will be issued dig...

மசக்காளிபாளையம் செங்குட்டையில் குப்பை அகற்றி மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் குப்பை அகற்றி பத்துவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை மாநகராட்...

Tree Saplings Turn Garbage-Dumping Spot into Green Zone in Masakkalipalayam

The Coimbatore Corporation has cleared accumulated garbage from a municipal site in Senguttai, Masakkalipalayam, and pla...

SUV Plunges into Pond Near Karumathampatti; Two Killed

Two persons from Tiruppur district died after the Bolero vehicle they were travelling in lost control and overturned int...

கோவை ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனையை ஆய்வு செய்த ஆட்சியர்

கோவையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நியாய விலைக்கடைகளில் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட...