கோவை உட்பட நான்கு மருத்துவமனைகளில் குரங்கம்மைக்கு சிறப்பு வார்டுகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கோவை விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நான்கு பெரிய மருத்துவமனைகளில் குரங்கம்மைக்கு சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள நான்கு பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குரங்கம்மை நோய் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிந்து தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் கப்பல் போக்குவரத்து மூலம் வெளிநாடுகளில் இருந்து வருகிற பயணிகளையும் கண்காணிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.



சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஏற்கனவே குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டதாகவும் வருகிற பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் நல்வாழ்வு துறையின் மாவட்ட சுகாதார அலுவலர்களின் சார்பில், குரங்கம்மை பாதிப்புகள் குறித்த பதாகைகள் விமான நிலையத்தில் பரவலாக வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு கல்லூரி மருத்துவமனை, திருச்சிகி.ஆ.பெ. விசுவநாதம் அரசு கல்லூரி மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளிலும் குரங்கமைக்கென்று பிரத்தியேக வார்டுகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.



மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை குரங்கம்மை பாதிப்பு இந்தியாவில் எங்கும் கண்டறியப்படவில்லை எனக்கூறி இருப்பதாகவும் இந்த சூழலில் கேரள எல்லைப் பகுதியில் குரங்கமை பாதிப்பு குறித்து சோதிப்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

முதல்வர் மருந்தகம் குறித்து,அரசு மருத்துவமனைகளில் தொற்றாநோய்களுக்குரிய மருந்துகள் இலவசமாக தரப்பட்டு கொண்டிருப்பதாகவும் மருந்துகளை குறைந்த விலையில் தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு முதல்வர் மருந்தகத்தை முதல்வர் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், முதல்வர் அறிவித்திருப்பது போல் பொங்கல் தினத்தன்று ஆயிரம் மருந்தகங்கள் தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்படும் என்று கூறினார்.

எல்லா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கிறது என்றும் பாதுகாப்பு குறைபாடுகள் என்று எந்த மருத்துவமனையிலும் இல்லை என்றும் கூறிய அவர், மருத்துவக் கல்லூரிகளிலும் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திட வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள பல்நோக்கு பிளாக்கில் ஒரு தளம் மட்டும் இயங்கி வருவது குறித்து, தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு தளமும் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...