துடியலூர் அரிமா சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன

கோவை துடியலூர் அருகே பழனிக்கவுண்டன்புதூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு துடியலூர் அரிமா சங்கம் சார்பில் சீருடைகள், எழுது பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. சங்கத் தலைவர் பள்ளி மேம்பாட்டுக்கு உறுதியளித்தார்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள பழனிக்கவுண்டன்புதூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு துடியலூர் அரிமா சங்கம் சார்பில் சீருடைகள் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கோவை துடியலூர் அரிமா சங்கத்தின் 2024-25ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்ற நிலையில், சமூக சேவை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் காளிமுத்து அனைவரையும் வரவேற்றார். அரிமா சங்கத் தலைவர் பி.பி.ஆறுச்சாமி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் பேசிய அரிமா சங்கத் தலைவர் ஆறுச்சாமி, பள்ளியின் சுற்றுச் சுவரை விரைவில் சீரமைத்துத் தருவதாகவும், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு சீருடைகள், பேனா, பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த உதவிப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30,000 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் செயலாளர் நித்தியானந்தம், பொருளாளர் ஆறுமுகம், பட்டயத்தலைவர் ஏ.வி.முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், அரிமா சங்க முன்னாள் தலைவர்களான ராம மூர்த்தி, அய்யாசாமி, சுந்தர்ராஜ், தம்பு நாயக்கர் மற்றும் உறுப்பினர்களான ராஜா, சர்குணம், குமார், மகேஷ், முத்துவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாணவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஆசிரியர் ஸ்மைலின் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...