பொள்ளாச்சியில் ஒண்டிவீரன் நினைவு நாள் மற்றும் கலைஞருக்கு புகழஞ்சலி

பொள்ளாச்சியில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடந்த இந்த நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



Coimbatore: பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு கோவை தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு மற்றும் அருந்ததியருகளுக்கு 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடுக்கு பெற காரணமாக இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆதிதிராவிடர் நல குழுவின் மாநில இணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், திமுக நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மற்றும் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் மற்றும் புகழஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பஞ்சலிங்கம், மாவட்ட அமைப்பாளர் ஞானசேகரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விவேக் உள்ளிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...