விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல்: தமிழக அரசு மீது விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

கோவை காரமடை, பொள்ளாச்சியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுப்பு, காவல்துறை தாக்குதல் குறித்து விவசாயிகள் சங்கம் கண்டனம். அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.



Coimbatore: கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் எஸ்கேபி(என்பி) சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை காரமடை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுத்து, காவல்துறை ஆய்வாளர்கள் விவசாயிகளை துன்புறுத்தியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சங்கத்தின் தமிழக இணை ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.



பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தின் பல இடங்களில் டிராக்டர் பேரணி அமைதியாக நடைபெற்று வருகிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் காரமடை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் காவல்துறை ஆய்வாளர்கள் ராஜசேகர், வெங்கடேஷ் ஆகியோர் டிராக்டரில் வந்த விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி, வாகனங்களை பறிமுதல் செய்தனர். பெண் விவசாயிகளை இரவு 7.30 மணி வரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது," என்று குற்றம்சாட்டினார்.

மேலும், "ஆகஸ்ட் 14-ம் தேதி நீதிமன்றம் வாகன பேரணி நடத்த அனுமதி அளித்திருந்தும், இரு காவல் ஆய்வாளர்கள் சட்ட விரோதமாகவும், நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளனர். தமிழக விவசாயிகள் மீது காவல்துறையை ஏவி திமுக அரசு பழிவாங்குகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது," என்றார்.

"தவறு செய்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஆகஸ்ட் 27-ம் தேதி திருச்சியில் நடைபெறும் சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை பொறுத்து அடுத்த கட்ட போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்," என பாண்டியன் எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...