மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நெகிழ்ச்சி காட்சி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1997-1999 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, தங்கள் ஆசிரியர்களை கௌரவித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 1997, 1998, 1999 ஆம் ஆண்டுகளில் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பள்ளியின் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் பயின்ற சுமார் 300க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில், அந்த ஆண்டுகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின் போது, தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற முன்னாள் மாணவர்களின் செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.



பின்னர், ஆசிரியர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மாணவர்கள், "எங்களுக்கு பாடம் கற்பித்து, நல்வழிப்படுத்திய ஆசிரியப் பெருமக்களை இன்று கௌரவிப்பதில் பெருமை அடைகிறோம். வரும் தலைமுறையினரும் இதே போல ஆசிரியர்களை கௌரவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் பெற்றோரை மதிப்பது போல, தனக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை எந்நாளும் மறக்கக் கூடாது," என்று தெரிவித்தனர்.

மேலும், "25 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் அனைவரும் ஒன்று கூடி பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம்," என்றும் அவர்கள் கூறினர். இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆசிரியர்கள் காலில் விழுந்து முன்னாள் மாணவர்கள் ஆசீர்வாதம் வாங்கிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது எனலாம்.

Newsletter

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...