உடுமலை வனச்சரக அலுவலகத்தில் இரு வனச்சரகர்கள்: விவசாயிகள் குழப்பம்

உடுமலை வனச்சரக அலுவலகத்தில் இரண்டு வனச்சரகர்கள் பணியாற்றுவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர். வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு யாரிடம் புகார் அளிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் உடுமலை வனச்சரகம் அமைந்துள்ளது. இங்கு தற்போது இரண்டு வனச்சரக அலுவலர்கள் பணியாற்றி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.



உடுமலை வனச்சரக அலுவலராக பணியாற்றி வந்த சிவக்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.



அவருக்குப் பதிலாக மணிகண்டன் என்பவர் நியமிக்கப்பட்டார். ஆனால், சிவக்குமார் தனது பணியிட மாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் சிவக்குமாரின் பணியை தொடர அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, தற்போது உடுமலை வனச்சரக அலுவலகத்தில் சிவக்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் வனச்சரக அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இருவரும் தனித்தனியாக மேசை நாற்காலி அமைத்து பணிபுரிவதால், பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.



வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு யாரிடம் புகார் தெரிவிப்பது, எவ்வாறு நிவாரணம் பெறுவது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், வனம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், ஒரே பணிக்கு இரண்டு நபர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், வனத்துறை உயர் அதிகாரிகள் உடுமலை வனச்சரக அலுவலராக சிவக்குமாரா அல்லது மணிகண்டனா என்பதை முறையாக பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...