பொள்ளாச்சி அருகே கோட்டூர் காவல் நிலையம் முன் பொதுமக்கள் முற்றுகை முயற்சி - காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பொள்ளாச்சி அருகே கெங்கம்பாளையம் இளைஞர் தற்கொலை வழக்கில் நியாயம் கோரி பொதுமக்கள் கோட்டூர் காவல் நிலையம் முன் முற்றுகை முயற்சி. காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் முற்றுகையிட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பொதுமக்கள் காவல் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி குமார் என்பவர் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில், தான் மூன்று நபர்களுக்கு பணம் கொடுத்திருந்ததாகவும், அதனை அவர்கள் திருப்பித் தராமல் மோசடி செய்ததால் தனது மரணத்திற்கு சாதிக் பாஷா, கணேசன் மூர்த்தி, செந்தில் நாதன் ஆகிய மூவரும் காரணம் என சக்தி குமார் குறிப்பிட்டிருந்தார்.



இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கணேச மூர்த்தியை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சாதிக் பாஷா மற்றும் செந்தில்நாதன் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில், கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சக்தி குமாரின் தற்கொலைக்கு நீதி கேட்டும், தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கோட்டூர் காவல் நிலையம் முன்பு முற்றுகையிட முயற்சித்தனர்.

இதுகுறித்து அறிந்த காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் பொதுமக்கள், நாளைக்குள் தலைமறைவாகியுள்ள இரண்டு குற்றவாளிகளையும் கைது செய்யாவிட்டால் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர். அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...