ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் முதல்முறையாக "வைபை கிளினிக்" அறிமுகம்

ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புற்றுநோய் சிகிச்சையை மேலாண்மை செய்ய அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது பொதுமக்களிடையே புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த முதல் முறையாக “வை-பை கிளினிக்”  ஒன்றை இன்று துவக்கியுள்ளது என ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் மருத்துவர் குகன் தெரிவித்தார்.



இங்கு நிறுவப்பட்டுள்ள வைபை கிளினிக் மோடம் மூலம், இங்கு வரும் நோயாளிகள், அவரது உதவியாளர்கள் அனைத்து புற்றுநோய் தொடர்பான விபரங்களை அறிய முடியும். இவர்கள் தங்களது மொபைல் போனில், வைபை-யை ஆன் செய்தால், வைபை கிளினிக் தானாகவே இணைக்கப்பட்டு, அதன் தேடுதளங்களான கூகுள் க்ரோம், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அல்லது எதுவாக இருந்தாலும், ஏ.காம் என்ற இணையத்தளத்தின் உதவியோடு தகவல்களை பெறலாம்.



இந்த வைபை கிளினிக்கில், புற்றுநோய் வகைககள் பற்றிய தகவல்கள் வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் எங்களது துறையை பற்றியும், ஆலோசனை வழங்குபவரின் அனுபவம் பற்றியும் இடம் பெற்றிருக்கும்.

லீனியர் ஆக்சலரேட்டர், பெட்சிடி படங்கள், சிகிச்சை அளிக்க உள்ள வசதிகள் மற்றும் பிற புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. தீபம் என்ற புற்றுநோய் பரிசோதனை முகாம் விபரங்களும் உள்ளன. ஆன்லைனில் முன்பதிவு செய்யவும், இ-மெயில் முகவரியும் இதில் பெறலாம். எனவே இந்த மையத்துடன் டிஜிட்டல் வழி தொடர்புகளை ஏற்படுத்தப்படுகிறது.

இந்த மையம் வெளியிட்டுள்ள கையேட்டில், அனைத்து வகையான புற்றுநோய், தலை, கழுத்து, மார்பகம், கருவாய், புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள், நேரம் மற்றும் உணவு கட்டுப்பாடு முறைகள் இடம் பெற்றுள்ளன. மார்பக புற்றுநோய், கர்ப்பபை வாய் மற்றும் வாய் புற்றுநோய் போன்றவைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுகள், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கேன்சர் தகவல்கள் மற்றும் அனைத்து புற்றுநோய் விழிப்புணர்வு இ-புத்தகங்கள் உள்ளன. பல்வேறு வகையான புற்றுநோய் சிகிச்சைகளுக்கு, மருத்துவ, அறுவை மற்றும் கதிவீச்சு சிகிச்சை வாய்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மருத்துவர் ஆலோசனையின்போது, இது பல்வேறு சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். அதோடு, மருத்துவர்களின் ஆலோசனையின்படி, சிகிச்சை செய்ய மனதளவில் இது தயார் செய்யும்.

ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மற்றுமொரு மைல்கல்லாக இந்த “வை-பை” கிளினிக் திகழ்வதோடு, நோயாளிகளுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். இதை, எஸ்என்ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் விஜயக்குமார் துவக்கி வைத்தார். ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பி.குகன், மருத்துவமனை டீன் சுகுமார், கதிர்வீச்சியல் அறுவை சிகிச்சை டாக்டர் கே.கார்த்திகேஷ் உள்ளிட்டோர் இதன் துவக்க விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...