ஒப்பந்தப்படி கூலி வழங்கப்படும் என்ற உறுதியையடுத்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் போராட்டம் நிறைவு

ஒப்பந்தப்படி கூலி வழங்கப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் உறுதி அளித்ததை அடுத்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் 23 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து பாவு நூல் பெற்று துணியாக நெய்து வரும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு சொந்தமாக சுமார் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைதறிகள் செயல்பட்டு வருகிறது.

விலைவாசி, மின்கட்டணம், உதிரிபாகங்கள் விலை உயர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து கூலி உயர்வு பெற்று வந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவரத்தையில் ஒப்புக்கொண்டப்படி சோமனூர் பகுதி ரகத்திற்கு 30 சதவிகிதமும், மற்ற ரகத்திற்கு 27 சதவிகித கூலி உயர்வையும் விசைத்தறி உரிமையாளர்கள் பெற்றனர்.

இந்நிலையில், தொழில் மந்த நிலையை காரணம் காட்டி சில ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை குறைத்து தருவதாகக் கூறி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் சங்கத்திற்குட்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரும்பாலானோர் கலந்துகொள்ளாததை அடுத்து பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 2014 ஆம் ஆண்டு நிர்னயம் செய்யப்பட்ட படி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை வழங்க வேண்டும் எனவும், கூலியை குறைத்து வழங்கினால் மாவட்ட ஆட்சியரிடம் தெரியப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.

சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து 23 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தொடர்ந்து, விசைத்தறியை இயக்குவது தொடர்பாக நாளை பொதுக்குழு கூட்டி முடிவு எடுக்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும், 2017 ஆம் ஆண்டிற்கான புதிய கூலி ஒப்பந்தம் தொடர்பாக வரும் வாரங்களில் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...