வாயில் கருப்பு துணி கட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தில்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோவை மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் வாயில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தேசிய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில்,

வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் போராடிவரும் விவசாயிகளையும், தமிழகத்தையும் தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவே இன்று நாங்கள் ஒன்றுகூடியுள்ளோம். இந்த போராட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகள், கூட்டமைப்பு சங்கங்களும், நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். 

தேசிய நதிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும். வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அன்டை மாநிலங்களிலும், தமிழகத்திலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்திலும் புறநகர் பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இவை சீராக ஒரே வழி மத்திய அரசு தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதே ஆகும்.

காவிரியை சுத்தப்படுத்த 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால் அதற்கான எவ்விதப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. 10 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது எனவும் தெரியவில்லை.

பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று ஏமாற்றியவருக்கு மூன்று மணி நேரத்தில் ஜாமின் கிடைக்கிறது. சில ஆயிரம் ரூபாய் வங்கிக்கடன் பெற்ற விவசாயிகளின் கழுத்து வங்கி நிர்வாகத்தால் நெரிக்கப்படுகிறது. எனவே, இந்தியா முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கியில் விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் தங்களது வாயில் கருப்புத் துணி கட்டி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...