தமிழ்புதல்வன் திட்ட தொடக்க விழாவிற்கு ரூ.5.50 லட்சம் நன்கொடை

கோவையில் நடைபெறவுள்ள தமிழ்புதல்வன் திட்டத் தொடக்க விழாவிற்கு வரும் மாணவர்களின் காலை உணவுக்காக தமிழ்நாடு சுயநிதி கல்லூரிகள் சங்கம் ரூ.5.50 லட்சம் நன்கொடை வழங்கியது.


கோவை: தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம் சார்பில், தமிழ்புதல்வன் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு வரும் மாணவர்களின் காலை உணவுச் செலவுக்காக ரூ.5,50,000 நன்கொடை வழங்கப்பட்டது.

கோவை அரசு கலைக்கல்லூரியில் ஆகஸ்ட் 9, 2024 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ள தமிழ்புதல்வன் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு வரும் மாணவர்களின் காலை உணவுச் செலவுக்காக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் இந்த நன்கொடைக்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முனைவர் என். யசோதா தேவி (செயற்குழு உறுப்பினர், பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி), ஏ.எம்.கலீல் (புரவலர், டெக்சிட்டி கலை அறிவியல் கல்லூரி), பேராசிரியர் முனைவர் அஜீத்குமார் லால் மோகன் (தலைவர், தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம்), டி.சேதுபதி (செயலர், தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரிகள் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...