பாரதியார் பல்கலையில் சிறப்பு அரியர் தேர்வு: செப்டம்பர் 8-ல் நடைபெறும்

கோவை பாரதியார் பல்கலையில் ஒரு பாடத்தில் மட்டும் அரியர் உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 8 அன்று சிறப்பு தேர்வு நடைபெறும். விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.



Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சிறப்பு அரியர் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, ஒரு பாடத்தில் மட்டும் அரியர் உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 8 அன்று தேர்வு நடைபெறும்.

இந்த சிறப்பு அரியர் தேர்வில் பின்வரும் மாணவர்கள் பங்கேற்கலாம்:

- 2019-20ம் ஆண்டில் எம்.எஸ்சி. சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் படித்த மாணவர்கள்

- 2021-22ல் இளநிலை படிப்பு முடித்த மாணவர்கள்

- 2022-23 முதுநிலை படிப்பு முடித்த மாணவர்கள்

இந்த தேர்வு, மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை தொடரவும், வேலைவாய்ப்பு பெறவும் உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வாய்ப்பு ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மட்டுமே. செய்முறை, பிராஜக்ட் அல்லது வைவா தேர்வுகளில் அரியர் உள்ளவர்கள் இந்த சிறப்பு தேர்வில் பங்கேற்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தேர்வு நடைபெறும் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு மாணவர்கள் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://b-u.ac.in/ -ஐ பார்வையிடலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...