திருப்பூர் மாநகரின் புதிய காவல் ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் பொறுப்பேற்பு

திருப்பூர் மாநகரின் 16வது காவல் ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் பொறுப்பேற்றார். பொதுமக்கள் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதியளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகரின் 16வது காவல் ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் சென்னை ஆயுதப்படை ஐஜியாக பணியாற்றி வந்தார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த பிரவீன் குமார் அபிநவு கடந்த மாதம் சேலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லட்சுமி ஐபிஎஸ் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.



பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமி, திருப்பூர் மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "மாநகர் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றச் செயல்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல், போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று உறுதியளித்தார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...