கோவை மதுகரை அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்ற இருவர் கைது

கோவை மதுகரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் இருவரை சோதனையிட்டதில், 150 கிராம் கஞ்சா மற்றும் 55 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, ஆகஸ்ட் 2 ஆம் தேதி மதுக்கரை ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தார்.

சோதனையின் போது, அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் 55 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கோவை சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த மோகன் மகன் சிஜு (வயது 25) மற்றும் சிட்கோ சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த தேவராஜ் மகள் ஷர்மிளா (வயது 27) என அடையாளம் காணப்பட்டனர்.

விசாரணையில், சிஜு ஒரு லேத் ஒர்க் ஷாப்பில் டர்னராக வேலை செய்து வருவதும், ஷர்மிளா B.Com., C.A. படித்து முடித்து ஆடிட்டராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரைகள், எடை இயந்திரம், மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். போதைப் பொருட்கள் விற்பனை செய்த இந்த இருவரும் எவ்வாறு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர், யாரிடமிருந்து இவற்றை பெற்றனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...