தீரன் சின்னமலை நினைவு நாள்: கோவை மற்றும் பொள்ளாச்சியில் எம்எல்ஏக்கள் மரியாதை

தீரன் சின்னமலையின் 219வது நினைவு நாளையொட்டி, கோவையில் கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏவும், பொள்ளாச்சியில் வி.ஜெயராமன் எம்எல்ஏவும் மரியாதை செலுத்தினர். வேளாளர் சன்மார்க்க சங்கம் மற்றும் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.


Coimbatore: தீரன் சின்னமலையின் 219வது நினைவு நாளை முன்னிட்டு கோவை மற்றும் பொள்ளாச்சியில் அவரது திருவுருவப் படத்திற்கு எம்எல்ஏக்கள் மரியாதை செலுத்தினர்.

கோவை பீளமேடு வேளாளர் சன்மார்க்க சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் பீளமேடு துரைசாமி, வேளாளர் சன்மார்க்க சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



இதேபோல், பொள்ளாச்சி எம்எல்ஏ அலுவலகத்திலும் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார், செந்தில்குமார், ஜேம்ஸ்ராஜா, சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் தியாகம் மற்றும் வீரம் நினைவுகூரப்பட்டது. அவரது வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்களையும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான அவரது துணிச்சலான எதிர்ப்பையும் பங்கேற்பாளர்கள் நினைவுகூர்ந்தனர்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...