மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி சார்பில் உலக புத்தக தினவிழா

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவ மாணவிகள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கலைநிகழ்ச்சி மற்றும் சொற்பொழிவு நடத்தினார்கள்.



விழாவிற்கு பள்ளி செயலாளர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் ஞானபண்டிதன் வரவேற்றார். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் நூலகத்தை திறந்து வைத்தார். மேட்டுப்பாளையம் பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளிகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை கவிஞர் கவிதாசன் வழங்கி சிறப்புரை ஆற்றினார். பள்ளி மாணவர்கள் புத்தகம் படிப்பதின் அவசியம், பற்றியும், படித்து உயர்ந்த உலகத்தலைவர்கள் பற்றியும் உரையாற்றினார்கள். 



விழாவில் சவிதா மருத்துவமனை டாக்டர் சசித்ரா, தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் மணி, நுகர்வோர் இயக்க தலைவர் ரெயின்போ வெங்கடராமன், சேவ் பவானி அமைப்பின் நிர்வாகி மணி, ரோட்டரி சங்க நிர்வாகி சுந்தர கணேஷ், உறுப்பினர் ஜெயராமன், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதல்வர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார். பொதுமக்கள் படித்து பயன்பெற பல்வேறு தலைப்புக்கள் இடம்பெற்ற புத்தக கண்காட்சி நடந்தது.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...