கோவையில் வழக்கறிஞர் படுகொலை: 6 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர விசாரணை

கோவை மயிலேறிபாளையம் அருகே வழக்கறிஞர் உதயகுமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயது வழக்கறிஞர் உதயகுமார், இன்று (ஆகஸ்ட் 2) பொள்ளாச்சி செல்லும் வழியில் படுகொலை செய்யப்பட்டார்.

வழக்கு ஒன்று தொடர்பாக பொள்ளாச்சி செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு மதியம் கிளம்பிய உதயகுமார், தனது காரில் மேலும் சிலருடன் பயணித்ததாக தெரிகிறது. மயிலேறிபாளையம் பிரிவு அருகே வந்தபோது, நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் அந்த கார் சென்றுள்ளது.

சிறிது தூரத்தில் காரில் இருந்தவர்கள் உதயகுமாரை வெளியே இறக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். பலத்த காயமடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குற்றவாளிகள் உதயகுமாரின் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் சூலூர் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். உதயகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை கைது செய்வதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...