பொள்ளாச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சியில் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சியில் வட்டாரப் போக்குவரத்து துறை, பொள்ளாச்சி உட்கோட்டம் காவல்துறை மற்றும் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், NIA கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார். பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராசன் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



முன்னாள் மாவட்ட முதன்மை போக்குவரத்து காப்பாளர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு, விபத்து எவ்வாறு நடக்கிறது, விபத்தை எப்படி தவிர்க்கலாம் போன்ற தகவல்களை வீடியோ மூலம் காண்பித்து விளக்கமளித்தார். சாலை விபத்துகளில் 20 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முகாமில், மாணவ மாணவிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுதல், சிக்னல்களை மதித்தல், ஓட்டுநர் உரிமம் பெறுதல், கட்டாயமாக ஹெல்மெட் அணிதல் போன்ற முக்கிய விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...