KMCH கல்லீரல் தொடர் பயிற்சி – 3 வைரஸ் ஹெப்பாடிட்டீஸ்… எளிதாக்குவோம்

KMCH கல்லீரல் மையத்தில் உள்ள மருத்துவர்கள் கல்லீரல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதிலும் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள மற்ற பொது மருத்துவர்களுக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் பயிலரங்குகள் நடத்துவதிலும் தங்களை நெருக்கமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.



இப்படி ஒரு முயற்சியைதான் ஒரு வருடம் முன்பு KMCH-ல் முன்வைத்து, தொடர்ந்து KMCH கல்லீரல் தொடர் என்னும் திட்டம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சைகளை பற்றிய விசேஷ பயிற்சி வகுப்புகளை பொது மருத்துவர்களுக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் நடத்துவது என்று KMCH கல்லீரல் மையம் முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக மூன்றாவது பயிற்சி வகுப்பை 22/04/2017 அன்று நடந்தது.

இம் முறை வைரஸ் கிருமியால் எற்படும் ஈரல் நோய்கள் சம்மந்தப்பட்ட கருத்தரங்கம் நடைபெற்றது . இந்தியாவில் ஏறக்குறைய  5 கோடி மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எய்ட்ஸ், டிபி,மலேரியா போன்ற நோய்களை விடஅதிகமாக மக்களை தாக்குகின்றது. இந்த முக்கியமான செய்தி பொது மக்கள் மற்றும் மருத்துவர்கள் அறியாமல் இருக்கிறார்கள் .இந்த விழிப்புணர்வை எற்படுத்த இந்த கருத்தரங்கம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என டாக்டர் . விவேகானந்தன் தலைவர் - KMCH கல்லீரல் துறை  நம்புகிறார்.இந்த கருத்தரங்கத்தில் பொது மருத்துவர்களும், அறுவைசிகிச்சை நிபுணர்களும் ,இரைப்பை மருத்துவ குழுவினரும் கலந்து கொண்டார்கள், இதன் சிறப்பு விருந்தினர்களாக தென் இந்தியாவின் இரைப்பை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.

கே.எம்.சி.எச் டைரக்டர் டாக்டர். அருண் பழனிச்சாமி கூறியதாவது. எந்த வைரஸ் கிருமியை நாம் தவிர்க்க முடியும், ஹெப்பாடிட்டீஸ் எ & இ வைரஸ்கள் அசுத்தமான உணவுகளில் இருந்து வருகிறது , மற்றும் ஹெப்பாடிட்டீஸ் பி & சி வைரஸ்கள் உடல் திரவங்கள் மூலம் பரவுகிறது. நம் வாழ்வு முறையில் சுத்தமும் சுகாதாரத்தையும் கடைபிடித்தால்  இக் கொடிய நோய்களில் இருந்து தவிர்க்கலாம். 

இதற்கு தடுப்பூசிகளும் உள்ளது. வரும் முன் காப்போம் என்பதனை மனதில் கொண்டு கே.எம்.சி.எச் பல விழிப்புணர்வு மருத்துவ முகாம்களை பல்வேறு இடங்களில் நடத்திவருகிறது.

இந்த கருதரங்கத்தை நடத்தியதற்கு  கே.எம்.சி.எச், டீன் டாக்டர் .V.குமரன் அவர்களும் மற்றும்  கே.எம்.சி.எச்,மருத்துவ இயக்குனர்  டாக்டர்.A.N.முருகன் அவர்களும் கல்லீரல் குழுவை மிக சிறப்பாக பாராட்டி ஊக்குவித்தார்கள்.

Newsletter

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...

கோவை விமான நிலையம் 5.15 சதவீதம் வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,74...

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...