கோவை பெட்ரோல் பங்கில் மோசடி: பணம் கொடுக்காமல் தப்பிய கார் ஓட்டுநர்

கோவை புட்டுவிக்கியில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்கில் ஆகஸ்ட் 1 அன்று ஒரு கார் ஓட்டுநர் ₹3,000 மதிப்புள்ள பெட்ரோல் நிரப்பிவிட்டு, பணம் செலுத்தாமல் தப்பிச் சென்றார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


கோவை: கோவை புட்டுவிக்கி பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்கில் ஒரு கார் ஓட்டுநர் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி மதியம், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஸ்விஃப்ட் காரில் பெட்ரோல் பங்கிற்கு வந்தார்.



அங்கிருந்த பெண் ஊழியரிடம் 3,000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பும்படி கேட்டுக்கொண்டார்.

பெட்ரோல் நிரப்பப்பட்ட பின்னர், எதிர்பாராத விதமாக அந்த நபர் பணம் செலுத்தாமலேயே காரை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பிச் சென்றார்.



பங்கின் ஊழியர் உடனடியாக கூச்சலிட்டு பின்தொடர்ந்தார், ஆனால் கார் நிற்காமல் சென்றுவிட்டது.

சக ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் அந்த காரை துரத்திச் சென்றனர். ஆனால், அதற்குள் கார் ஓட்டிய நபர் தப்பித்துச் சென்றுவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் பெட்ரோல் பங்கின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மோசடி செய்த நபரை கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...