முன்னாள் படைவீரர்களுக்கு சொத்துவரி திருப்பி அளிப்பு - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தங்கள் சொந்த வீட்டிற்கு செலுத்தும் சொத்துவரியை திரும்பப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த சலுகை வழங்கப்படுகிறது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் தாங்கள் குடியிருக்கும் ஒரு சொந்த வீட்டிற்கு செலுத்தும் சொத்துவரியை முன்னாள் படைவீரர் நலத்துறை மூலமாக மீளப்பெற்றிட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின்படி முன்னாள் படைவீரர் செலுத்தும் வீட்டுவரி ஒரு வருடத்திற்கு (2 அரையாண்டு) அதிகபட்சமாக ரூ.10,000/- அல்லது செலுத்தப்பட்ட தொகை இதில் எந்த தொகை குறைவோ அந்த தொகையினை, வீட்டுவரி செலுத்திய நாள் முதல் 6 மாத காலத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சலுகையை பெற சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னாள் படைவீரர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருத்தல் வேண்டும். அவரது சொந்த வீட்டிற்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். முன்னாள் படைவீரர் வருமானவரி செலுத்துபவராக இருத்தல் கூடாது. இராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் மறு வேலைவாய்ப்பு முறையில் அரசுத்துறைகளில் நிரந்தரமாக பணிபுரிபவர்கள் மற்றும் இந்த மறுவேலைவாய்ப்பு பணியில் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த சலுகைக்கு தகுதியற்றவர்கள்.

மேலும், வீட்டுவரி செலுத்தப்படும் வீடு முன்னாள் படைவீரரின் பெயரில் மட்டுமே இருத்தல் வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட நாளான 27.02.2024-க்கு பிறகு 2023-24 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டிற்கு செலுத்திய வீட்டுவரி முதல் மீளப்பெற்றுக் கொள்ளலாம்.

தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் செலுத்திய வீட்டுவரி தொகையினை மீளப்பெற விரும்பினால், வீட்டுவரி செலுத்திய அசல் இரசீது, அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகலுடன் நேரில் வந்து உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...