கோவை மாநகராட்சி 1-வது வார்டில் பல்வேறு அபிவிருத்தி பணிகள்: கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு

கோவை மாநகராட்சி 1-வது வார்டில் பாதாள சாக்கடை, சாலை சுத்தம், அங்கன்வாடி நடைபாதை மற்றும் வடிகால் சுத்தம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளை வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகளை வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் நேரில் ஆய்வு செய்தார்.

அப்பநாயக்கன்பாளையம் ஈஸ்வர சக்தி நகர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியினை கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் நேரில் பார்வையிட்டார். இப்பணியினை தரமாக செய்திட வேண்டுமென ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தினார்.



பார்க்சிட்டி பகுதியில் சாலையில் கழிவுகள் கொட்டப்பட்டதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கவுன்சிலர் நேரில் பார்வையிட்டு அந்த பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.



அப்பநாயக்கன்பாளையம் அங்கன்வாடி பள்ளியின் முன்புறம் குழந்தைகள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.



மேலும், வார்டு முழுவதும் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளை கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...