அமராவதி அணையில் உபரி நீர் வெளியேற்றம்: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர் போன்ற இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மறையூர் கோவில் கடவு பகுதியில் உள்ள பாம்பாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது அமராவதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,047 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 90 அடியாக இருக்கும் நிலையில், தற்போது நீர்மட்டம் 88.52 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பிரதான மதகுகள் வழியாக வினாடிக்கு 4,298 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கரையோர கிராமங்களான கல்லாபுரம், ருத்ரா பாளையம், கொழுமம், மடத்துக்குளம், காரத்தொழவு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாரிகளின் அறிவுரைகளைப் பின்பற்றி, பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...