கோவை சிங்காநல்லூர் அருகே செல்போன் பேசியபடி சென்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழப்பு

கோவை சிங்காநல்லூர் அருகே, செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்த 22 வயது இளைஞர் அஸ்வின் குமார், ரயில் மோதி உயிரிழந்தார். காதில் இயர்போன் அணிந்திருந்தது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


கோவை: கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி அருகே உள்ள தண்டவாளத்தில் இன்று (ஜூலை 30) காலை, இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

தொடக்கத்தில் இறந்தவரின் அடையாளம் தெரியவில்லை. ஆனால் தண்டவாளம் அருகில் கிடந்த ஒரு மணிப்பர்ஸ் மற்றும் ஏடிஎம் கார்டின் மூலம், கோவையில் உள்ள வங்கியுடன் தொடர்பு கொண்டு கணக்கு வைத்திருப்பவரின் பெயரை உறுதி செய்தனர். இதன் மூலம் இறந்த இளைஞர் கோவை சௌரிபாளையத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார் (22) என்பது தெரிய வந்தது.

விசாரணையில், அஸ்வின் குமார் அன்று காலை காதில் இயர்போன் அணிந்து கொண்டு செல்போனில் பேசியபடி சென்றபோது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் அஸ்வின் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். காதில் இயர்போனை அணிந்து கொண்டு பேசியபடி சென்ற இளைஞர் ரயில் மோதி இறந்த இந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...