கௌசிகா நதி புனரமைப்பு: ஜல் சக்தி அபியான் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கள ஆய்வு

கோவையில் ஜல் சக்தி அபியான் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கௌசிகா நதி புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர். வையம்பாளையம் தடுப்பணை மற்றும் அக்ரஹார சாமக்குளம் ஏரியை நேரில் பார்வையிட்டு, மக்கள் இயக்கத்தின் முயற்சிகளை பாராட்டினர்.


கோவை: கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் ஜூலை 30 ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், ஜல் சக்தி அபியான் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் குழுவிற்கு கௌசிகா நீர் கரங்களின் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.



கலந்தாய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் குழு கௌசிகா நதியின் புனரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தது. குறிப்பாக, கௌசிகா நீர்கரங்களின் முன்னெடுப்புகளின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட வையம்பாளையம் கௌசிகா நதி தடுப்பணை மற்றும் அக்ரஹார சாமக்குளம் ஏரியை பார்வையிட்டனர்.

கள ஆய்வின் போது, பல்வேறு நீர்நிலைகளில் மக்கள் இயக்கமாக மேற்கொண்டு வரும் மீட்டெடுப்பு முயற்சிகளை அதிகாரிகள் கேட்டறிந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நேரடி கள ஆய்வின் முடிவில், அதிகாரிகள் குழு முக்கியமான முடிவுகளை எடுத்தது.

கௌசிகா நதியையும், மாங்கரை நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் முழுமையாக புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைப்பதாகவும், இதற்கான தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுத்தர உறுதி அளிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...