பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாப்பு பணி தீவிரம்

பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் காவல்துறை மற்றும் பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்றிரவு 9 மணியளவில் அதன் முழு கொள்ளளவான 100 அடியை எட்டி நிரம்பியது. ஜூன், ஜூலை மாதங்களில் தொடர்ந்து நான்காவது முறையாக அணை நிரம்பி உள்ளது.



பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்வரத்து அப்படியே உபரி நீராக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.



இதனால் பவானிக் கரையோர பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.



ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசலில் பயணிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.



பவானி ஆற்றின் கரையில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று ஜூலை 30 ஆம் தேதி ஆடிக்குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து உள்ளனர்.

பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க கூடாது என எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டு கோவிலின் படித்துறை மற்றும் கரையோர பகுதிகளை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்க மாநில பேரிடர் மீட்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...