கோவையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த இரு பெண்கள் கைது- தாயுடன் சிறை சென்ற குழந்தைகள் !

கோவையில் இரு வேறு இடங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 2 பெண்கள் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை ஒரு சிலர் தொழிலாகவே செய்து வருகின்றனர்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்களிடம் இருந்து அவ்வப்போது சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பதும் வழக்கம்.

இந்நிலையில் கோவை ரயில் நிலையம் முன்பு ஒரு வயது குழந்தையை வைத்து பிச்சை எடுத்த சுகன்யா என்ற பெண்ணை கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார் அவர்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல் ரத்தினபுரி, முத்துகுமரன் நகர் பள்ளிவாசல் அருகே மாதவி (9) மற்றும் தமிழரசி (2) ஆகிய இரு குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கவைத்த மாரியம்மாள் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைபட்ட சின்னஞ்சிறு குழந்தைகள்:-

முன்னதாக, கோவையில் குழந்தையை வைத்து பிச்சை எடுத்த சுகன்யா மற்றும் மாரியம்மாளின் குழந்தைகளுக்கு ஒன்று மற்றும் இரண்டு வயதே நிறைவடைந்துள்ளதால் தாயுடனேயே அக்குழந்தைகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். மாரியம்மாளின் மற்றுமொரு 9 வயது குழந்தை மட்டும் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...