மனைவிக்கு உயர் சிகிச்சை கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் கணவர் போராட்டம்

திருப்பூரில் விபத்தால் மூளை இரத்தக் கசிவு ஏற்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக பணியாளருக்கு உயர் சிகிச்சை கோரி கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் போராட்டம் நடத்தினார். அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விபத்தால் மூளை இரத்தக் கசிவு ஏற்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக பணியாளருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாதிக்கப்பட்ட மனைவியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு கிடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த தேவம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சோழனின் மனைவி ஜோதிலட்சுமி, உடுமலை கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர், தனக்கு பணியிடமாறுதல் வேண்டும் என விண்ணப்பித்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இவருக்கு பணியிடமாறுதல் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பணிக்குச் சென்ற ஜோதிலட்சுமிக்கு விபத்து ஏற்பட்டு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜோதிலட்சுமி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், உடனடியாக அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்து பணியிடமாறுதல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, தீவிர சிகிச்சையில் இருந்த மனைவி ஜோதிலட்சுமியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு கிடத்தி கணவர் சோழன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து சோழன் தனது போராட்டத்தைக் கைவிட்டார். பின்னர், ஜோதிலட்சுமி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...