மனைவிக்கு உயர் சிகிச்சை கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் கணவர் போராட்டம்

திருப்பூரில் விபத்தால் மூளை இரத்தக் கசிவு ஏற்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக பணியாளருக்கு உயர் சிகிச்சை கோரி கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் போராட்டம் நடத்தினார். அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விபத்தால் மூளை இரத்தக் கசிவு ஏற்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக பணியாளருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாதிக்கப்பட்ட மனைவியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு கிடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த தேவம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சோழனின் மனைவி ஜோதிலட்சுமி, உடுமலை கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர், தனக்கு பணியிடமாறுதல் வேண்டும் என விண்ணப்பித்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இவருக்கு பணியிடமாறுதல் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பணிக்குச் சென்ற ஜோதிலட்சுமிக்கு விபத்து ஏற்பட்டு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜோதிலட்சுமி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், உடனடியாக அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்து பணியிடமாறுதல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, தீவிர சிகிச்சையில் இருந்த மனைவி ஜோதிலட்சுமியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு கிடத்தி கணவர் சோழன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து சோழன் தனது போராட்டத்தைக் கைவிட்டார். பின்னர், ஜோதிலட்சுமி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...