நீலிகோணாம்பாளையம் அருகே இளைஞரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய இருவர் கைது

கோவை நீலிகோணாம்பாளையம் அருகே, முன்விரோதம் காரணமாக 18 வயது இளைஞரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய இரு நபர்கள் சிங்காநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை நீலிகோணாம்பாளையம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த சுந்தராஜின் மகன் கார்த்திகேயன் (18), அப்பகுதியில் உள்ள சரோஜினி ரோட்டில் இருமொழி வாகன பழுதுபார்ப்பு நிலையத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, கார்த்திகேயனுக்கும் சிபு (30) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சிபு தன்னை மிரட்டுவதாக கார்த்திகேயன் தனது நண்பர் ஸ்ரீதரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீதர், சிபுவை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜூலை 26 அன்று கார்த்திகேயன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிபு மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் அங்கு வந்தனர். அவர்கள் கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினர்.

இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கார்த்திகேயனை தாக்கியவர்கள் சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனியைச் சேர்ந்த சிபு (30) மற்றும் நீலிகோணாம்பாளையத்தைச் சேர்ந்த ரெஷித் (25) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் இருவரையும் ஜூலை 28 அன்று கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...