பொள்ளாச்சி நகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் - நகர மன்ற தலைவர் வீடு வீடாக ஆய்வு

பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதி கிருஷ்ணன் குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Coimbatore: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி நகர பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

இன்று நகராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார். வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் தேங்கி புழுக்கள் உள்ளதா என்பது குறித்தும், வீடுகளை சுற்றியும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.



நகராட்சி முழுவதும் 80க்கும் மேற்பட்ட டெங்கு தடுப்பு ஊழியர்கள் வீடு வீடாக சென்று டெங்குவை பரப்பும் புழுக்களை மருந்து தெளித்து அழித்து வருவதாகவும், நிலவேம்பு கசாயம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நகரமன்ற தலைவர் தெரிவித்தார். டெங்கு இல்லாத நகரமாக பொள்ளாச்சியை மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது நகர மன்ற உறுப்பினர்கள் நாகராஜ், கவிதா, துரைபாய் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...