மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: திருப்பூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் குமரன் சிலை முன்பு 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உள்ளூர் பிரமுகர்கள் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குமரன் சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



ஜிஎஸ்டி வரி மூலம் அதிக நிதி பெறும் மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்க மறுத்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். மேலும், மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த ஆண்டும் நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், தமிழகத்திற்கு புதிய ரயில் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி, மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...